அவள் நினைவு

இளைய சிவப்பு அரும்புகளில்
இலை மறையும் புதுரோஜா.

விழிமூடி ஓர் இமை
தன் விளிம்புகளில் ஊறுவதை
துளி துளியாய் சிந்தும்
துயரவெளிப் பனித்திரையில்
அழுது முகம் மறைகிறது.
அலரிகளும் போய் மறையும்.

பளபளன்ற
சிவப்புநிற
பரல் கல்லில்
நீர் ஓடும்,

சரசரெனும் மாவடியில்
சருகுநிறக் கால் தெரியும்.
அலையெறியும் பாவாடை
முழங்காலின் அருகுயரும்
நடை நடையே
நடையதுவாய்
நடையினிலே கால் இரண்டு
விட முடியா ஒரு நினைவாய்
விளைவும் ஒரு மனத்திரையில்
கடல் அலைகள் மடிநோக்கி
கரையிருந்து மீள்வனவே.

Leave a Reply

Your email address will not be published.